இலங்கை சிறைகளில் இருந்து 85 தமிழக மீனவர்கள் விடுவிப்பு.. இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இலங்கை சிறைகளில் இருந்து 85 தமிழக மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 85 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
கடந்த 6ம் தேதி ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் சென்று கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் பிரிட்ஜோ என்ற 21 வயது மீனவர் குண்டுபாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்தார். சரோன் என்ற இன்னொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.

கொந்தளிப்பு
நடுகடலில் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் இலங்கை அரசை கண்டித்து மீனவர்களும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

பச்சைப் பொய்
இதனைத் தொடர்ந்து, கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இலங்கை அரசு பச்சையாக பொய் கூறியது. ஆனால், இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு தெரிவித்தது.

தொடர் போராட்ட எதிரொளி
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க கொழும்பு நகரில் இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பிலும் பரஸ்பரம் தங்களது சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.

விடுதலை அறிவிப்பு
அதன்படி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் இதேபோல் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கைதாகி இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்கள் 19 பேரை இந்திய அரசு விடுதலை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

85 மீனவர்கள் விடுதலை
இதனைத் தொடர்ந்து இன்று இலங்கை சிறையில் இருந்த 85 தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அரசு ஒப்படைத்துள்ளது. விரைவில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications