Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் 8 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேதுபதி. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 8 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். இதனை அக்குழந்தை தனது பள்ளி அசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர் குழந்தைகள் பாதுகாப்பு மையம் மூலமாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

A 8-year old girl was sexually assaulted by her father in Tirupur.

விசாரணையில், தந்தை குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. அதனை தாய் இந்திரா வேடிக்கை பார்த்தது தெரியவந்தது. இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, தந்தை ராஜ சேதுபதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார். மேலும், உடந்தையாக இருந்த தாய் இந்திராவுக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், குற்றத்தை மறைத்ததற்காக 6 மாத தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+