உயிரை கையில் புடுச்சிக்கிட்டு இருக்கோம்: வாட்ஸ்ஆப்பில் பரவும் பகீர் ஆடியோ
சென்னை: சவுதியில் வீட்டு வேலை பார்க்கும் பெண் ஒருவர் பதட்டமான சூழலில் பேசிய ஆடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் ஒரு இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட புகைப்படமும், மற்றும் ஒரு பெண் பதட்டத்துடன் அது குறித்து பேசும் ஆடியோவும் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது.

அந்த ஆடியோவில் பேசிய பெண் கூறியிருப்பதாவது,
நான் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் என்ற இடத்தில் ஹவுஸ்மெயிடாக உள்ளேன்(பணிப்பெண்). சவுதியில் இலங்கை தமிழ் பெண்ணான கல்பனா அக்கா கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
இங்கு அந்த அக்கா மரணம் மட்டும் அல்ல பல மரணங்களுக்கான காரணத்தை கண்டுபிடித்து இலங்கை தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. மற்ற தூதரகங்களில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் இலங்கை தூதரகத்தில் மட்டும் கண்டுகொள்வது இல்லை.
சவுதியில் 99 சதவீதம் பணிப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு உயிரும் எப்படி போகிறது தெரியுமா? வெளியில் இருக்கும் டிரைவர் அண்ணாக்களுக்கு கூட தெரியும். ஆனால் யாரும் உதவ முன் வருவது இல்லை.
இந்த ஆடியோவை வாட்ஸ்ஆப்பில் பார்வர்டு செய்யவும். நீங்கள் நினைத்தால் எங்களை கண்டிப்பாக காப்பாற்ற முடியும். நாங்க எல்லாருமே நாட்டுக்கு உயிரோட திரும்பிப் போகணும். எல்லாருமே ஒரே தமிழ் இனம் தானே, தமிழ் ரத்தம் தானே, எங்களுக்காக நீங்க எல்லாம் உதவ மாட்டீங்களா?
இங்கு இருக்கும் நீங்க தான் எங்களுக்கு உதவ முடியும். ஏன் என்றால் இங்கு இருக்கும் இலங்கை தூதரகம் எங்களை கைவிட்டுவிட்டது. கல்பனா அக்காவோட சாவு தான் கடைசியான சாவாக இருக்கணும். நாங்கள் எல்லாம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களை எப்பொழுது வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது.
நாங்க இருக்கும் வீட்டில் எங்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள். கூடப் பிறந்த அண்ணனா நினைத்து உதவி செய்யுங்க. எங்கள் நாட்டிற்கு செல்ல உதவுங்க என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோ ஒரு மாத காலமாக வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications