கார்த்தி சிதம்பரத்திடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ
ப.சிதம்பத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளது.
சென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
2007-2008-ஆம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது.
ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் ரூ.35 லட்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ சோதனை கடந்த 5 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்தியிடம் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்து வருகிறது. எனினும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு சிபிஐ ரெய்டு நடத்தியதாகவும், இந்த சோதனை எதற்கு என்று எனக்கு தெரியவில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.