11 அதிமுக சார்பு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து.. திமுக வரவேற்பு
டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை திமுக வரவேற்றுள்ளது.
சென்னை: உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் டிஎன்பிஎஸ்பி உள்ள 11 உறுப்பினர்கள் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்றுள்ளார்.
டிஎன்பிஎஸ்சியில் உரிய விதிமுறைப்படி உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்று கூறி திமுக, பாமக, மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை டி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்றுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:
டிஎன்பிஎஸ்சில் உள்ள 11 உறுப்பினர்களும் அரசியல் சார்பு உள்ளவர்களாக இருந்தனர். இந்த தீர்பை வரவேற்கிறேன். தமிழக அரசு மீண்டும் தவறுகள் செய்யாமல் இருப்பதற்கான வழியை இந்தத் தீர்ப்பு உருவாக்கி கொடுத்திருக்கிறது. இதனை மீறி தவறு செய்தார்கள் என்றால் மீண்டும் நீதிமன்றத்தால் கண்டிக்கப்படுவார்கள். அல்லது நீதிமன்றம் மீண்டும் அதனை கவனத்தில் கொள்ளும் என்று கருதுகிறேன்.
டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் அதிமுகவில் தீவிர உறுப்பினர்களாக இருந்தவர்கள். ஒருவர் மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தவர். மற்றொருவர் அரசு வழக்கறிஞராக இருந்தவர். அவர் மீது அரசு நிலத்தையே அபகரித்துக் கொண்டார் என்ற வழக்கு இருக்கிறது. இன்னொமொருவர் நீதிபதியாக இருந்த போது, நீதிமன்றமே அவர் தகுதியற்றவர் என்று சொல்லப்பட்டவர்.
இப்படி ஒவ்வொருவரும் சந்தேகத்திற்குரிய பின்னணியை கொண்டவர்கள். அதனால்தான் இந்த வழக்கை நான் தொடர்ந்தேன். நான் மனுவில் குறிப்பிட்டக் காரணங்களை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்துள்ளனர் என்று கருதுகிறேன் என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications