டிஜிபி ராஜேந்திரனின் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு- தலைமைச் செயலருக்கு ஹைகோர்ட் கிளை நோட்டீஸ்
தமிழக காவல்துறை டிஜிபியாக ராஜேந்திரனின் பதவி நீட்டிப்பு விவகாரத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை: குட்கா லஞ்ச விவகாரத்தில் சிக்கிய தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக காவல்துறை டிஜிபியாக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ராஜேந்திரனின் பதவிக் காலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய டிஜிபி யார் என்பது குறித்து மத்திய தேர்வாணையத் தலைவர் தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து டிஜிபியாக இருந்த ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் அவர் லஞ்சம் பெற்றதாக வருமான வரித் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் லஞ்ச ஒழிப்பு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பணிநீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவிக்கையில், டிஜிபி ராஜேந்திரனின் பணி நீட்டிப்புக்கான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை குறித்த ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் தலைமை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications