உடல்நலக் குறைவால் விவசாயிகள் மரணம் என்பதா.. அமைச்சர் பேச்சால் உறவினர்கள் கொந்தளிப்பு
உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலேயே விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் சம்பத் பேசியுள்ளார். இதற்கு மரணம் அடைந்த விவசாயிகளின் உறவினர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: பயிர்கள் கருகிய துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சம்பத் பேசிய சர்ச்சைப் பேச்சால் விவசாயிகள் கொந்தளிப்படைந்துள்ளனர்.
காவிரியில் இருந்து முறையாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. வடகிழக்கு பருவ மழை தாமதமாக ஆரம்பித்ததோடு, போதிய அளவு மழையும் பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர்களுக்கு நீர் இல்லாமல் காய்ந்து வருவதைக் கண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வறட்சிக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் சம்பத் விவசாயிகள் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக சர்ச்சையை உருவாக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அமைச்சர் சம்பத்துக்கு விவசாயிகளை இழந்த குடும்பத்தினரும், இதர விவசாயிகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், வறட்சி பாதிப்பால் விவசாயிகள் உயிரிழந்ததை அமைச்சர் சம்பத் கொச்சைப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications