ம.ந.கூ.விலிருந்து மதிமுக விலகுவது எதிர்பார்த்ததுதான்: ஜி.கே. வாசன்
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியிருக்கிறது என்ற செய்தி ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியிருக்கிறது என்ற செய்தி ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ராமமோகன ராவ் அளித்திருக்கும் பேட்டிக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை வாசன் வெளியிட்ட அறிக்கை:
''மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியிருக்கிறது என்ற செய்தி ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று. எனவே இதில் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் அளித்திருக்கும் பேட்டிக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் துணை ராணுவத்தினர் உதவியுடன் சோதனை நடத்திய பிறகு இன்று அவர் அளித்திருக்கும் பேட்டி குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
மேலும் ஏற்கெனவே நடந்த வருமான வரி சோதனை பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவராதது என்பது மத்திய, மாநில அரசுகளின் மீது மேன்மேலும் சந்தேகத்தை அதிகரித்து இருக்கிறது.
உண்மை நிலையை வெளிப்படுத்துவது ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் பொறுப்பு, கடமை. அதை மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications