சொத்துக் குவிப்பு தீர்ப்பு வரும் வரை சசிகலாவை கூப்பிட மாட்டார் ஆளுநர்
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை அவரை தமிழக பொறுப்பு ஆளுநர் சந்திக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்று தமிழக பொறுப்பு ஆளுநர் உறுதியுடன் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. சசிகலா என்னதான் மிரட்டினாலும் அதற்கு ஆளுநர் மாளிகை அடி பணியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதாகவும், அதற்கு சொத்துக் குவிப்பு தீர்ப்பு வழக்கின் தீர்ப்பு வரும் காத்திருப்பது அவசியம் என்று அவர் கருதுவதாகவும், இதனால்தான் தனது முடிவை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தீர்ப்பு வந்த அடுத்த நிமிடமே ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை ஆளுநர் பெற்று விட்டதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பு தகவல்கள் தெரிவிகக்கின்றன.
மற்றபடி சசிகலா சொல்வது போல அதிமுகவை உடைக்க ஆளுநர் முயற்சிக்கவில்லை. ஆளுநரின் தாமதத்திற்கு இதுதான் காரணம். வேறு எதுவும் இல்லை. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே ஆளுநரின் கருத்தாகும்.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு முக்கியமானது. அதில் சசிகலா விடுதலையாகி விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தண்டிக்கப்பட்டு விட்டால் அவர் பதவியிழக்க நேரிடும். எனவே அடுத்தடுத்து பதவிப்பிரமாண நிகழ்ச்சிகளை நடத்த ஆளுநர் விரும்பவில்லை. இது தமிழகத்தில் தேவையில்லாத குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்பதால்தான் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இப்போதைக்கு சசிகலாவுக்கு நேரம் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications