அவசர சட்டம் பற்றி அச்சம் வேண்டாம்.. சட்டசபையில் நிறைவேற்றினால் நிரந்தரமாகிவிடும்: ஓ.பி.எஸ் பேட்டி
வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் நாளை துள்ளிக்குதிக்கும் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்றும், நாளை வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர சட்டம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நிரந்தர தீர்வு காணும் வரையில் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. அவசர கதியில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பவில்லை எனக் கூறி அலங்காநல்லூரிலும் வாடிவாசல் முன்பு பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜல்லிக்கட்டை பொறுத்த வரையில் தற்காலிகம் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அவசரச் சட்டம் பற்றி அச்சப்படத் தேவையில்லை. நிரந்தர சட்டம் என்பதை போராட்டக்காரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தருவார்கள் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டம் அடுத்த வாரமே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் நாளை வாடிவாசல் திறக்கும் காளைகள் துள்ளிக்குதிக்கும் எனவும் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications