ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் மது விலக்கு பற்றி மருந்துக்கு கூட அறிவிப்பு இல்லை!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய, சுதந்திர தின உரையின்போது, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மதுவிலக்கு ஒரு அம்சமாகவே அவரது உரையில் இடம்பெறவில்லை.
மதுவிலக்கு கோரி போராடிய, காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்த பிறகு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டங்கள் வலுத்தன. கல்லூரி மாணவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. வாழப்பாடி அருகே, டாஸ்மாக் மீது குண்டு வீசியதில் அப்பாவி தொழிலாளர் உயிரிழந்தார். சென்னை குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் காயமடைந்தார்.
இதுபோன்ற களேபரங்கள், வரும் சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. எனவே, டேமேஜ் கன்ட்ரோலுக்காகவாவது, மதுவிலக்கு அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த அறிவிப்பை வெளியிட சுதந்திர தின உரையை ஜெயலலிதா பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாட்ஸ்சப் போன்ற சமூக வலைத்தளங்களிலும், சுதந்திரதினத்தன்று ஜெயலலிதா, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது குறித்தோ அல்லது, மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை குறைப்படு குறித்தோ அறிவிப்பு வெளியிடுவார் என்று தகவல்கள் பரப்பப்பட்டன.
இந்நிலையில், கோட்டையில் தேசிய கொடியேற்றி ஜெயலலிதா இன்று உரையாற்றியபோது, மாநில மக்களில் பெரும்பாலானோர் மது விலக்கு அறிவிப்பை எதிர்நோக்கி ஊடகங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜெயலலிதா ஆற்றிய 10 நிமிட உரையில் மதுவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மது கொள்கை பற்றிய வேறு எந்த தகவலும் அவரது உரையில் இடம்பெறவில்லை.
எனவே, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி விமர்சனம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications