எம்எல்ஏக்களை குற்றவாளிகளைப் போல் சிறை வைக்க சசிகலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது? குஷ்பு ஆவேசம்
அதிமுக எம்எல்ஏக்கள் 131 பேர் மன்னார்குடி கோஷ்டியால் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 131 பேர் மன்னார்குடி கோஷ்டியால் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்களை சிறைவைக்க சசிகலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையேயான மோலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. முதல்வர் இருக்கை யாருக்கு என்ற போட்டியும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் பீதியடைந்த மன்னார்குடி கோஷ்டி எஞ்சிய எம்எல்ஏக்களை காப்பாற்றிக் கொள்ள அவர்களை சொகுசு பேருந்தில் கடத்தி கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளது.
My thoughts r wid 131 MLAs who wr literally hijacked in a bus bcoz dey wr trusted..wonder if such MLAs hve any dignity in dem? #OPSForCM
— khushbusundar (@khushsundar) February 9, 2017
எம்எல்ஏக்களை சிறைபிடித்து வைத்திருக்கும் மன்னார்குடி கும்பலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Wat baffles me is wat is d catch point dis woman has on ths MLAs tat dey agree 2 b treated like convicted culprits in a jail??#MONEY/Power?
— khushbusundar (@khushsundar) February 9, 2017
அதில் "கடத்தப்பட்டதுப்போல் 131 எம்எல்ஏக்கள் சொகுசுப் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிதான் யோசிக்கிறேன்.
ஜனநாயகத்தில், இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு மாண்பு என்று ஏதாவது இருக்கிறதா? சிறையில் இருக்கும் குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பணமா? அதிகாரமா?" இவ்வாறு குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications