ஜெயலலிதா மரணம்... கொடநாடு கொலை... விபத்து... தற்கொலை - நீடிக்கும் மர்மம்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பிறகு கொடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, விபத்து, தொடர் தற்கொலை என மர்மம் நீடிக்கிறது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடப்பவை எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. கொடநாடு பங்களா காவலாளி கொலை தொடங்கி, டிரைவர் கனகராஜ் மரணம், தினேஷ் தற்கொலை, அப்பல்லோ நர்ஸ் தற்கொலை முயற்சி என மர்மம் நீடித்து வருகிறது.
அரசு பணிகளில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென உடல் நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக உடல்நிலை தேறி வந்ததாக கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

காவலாளி கொலை
போயஸ் தோட்ட பங்களாவில் அமானுஷ்ய சத்தம் கேட்பதாக பீதி பரவியது. ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களா காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

டிரைவர் மரணம்
கொலை வழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்ட டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி மர்மமான முறையில் மரணமடைந்தார். இது விபத்தா, கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விபத்து, தற்கொலை
கனகராஜின் நண்பர் சயன் அதே நாளில் விபத்தில் சிக்கினார். அவரது மனைவி, மகள் விபத்தில் பலியாகினர். சில வாரங்களுக்கு முன்பு கொடநாடு பங்களாவில் வேலை பார்த்த இளைஞர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

நர்ஸ் தற்கொலை முயற்சி
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டு பீதியை கிளப்பியது. இந்த நிலையில் அப்பல்லோ நர்ஸ் குளோரியா தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோரியாவின் கணவர் கடந்த மாதம் தற்கொலை செய்த நிலையில் குளோரியாவும் இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications