மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை முறிந்தது.. போலீஸ் தடியடி
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 6 நாட்களாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றினாலும் நிரந்தர சட்டம் தேவை என்று கோரி போராட்டத்தை கைவிடாமல் இரவும் பகலுமாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று சட்டபேரவைக் கூட்டம் கூட உள்ளதால், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியை போலீசார் செய்து வருகின்றனர்.
#Jallikattu supporters being forcefully evicted by police from the protesting site in Madurai's Tamukkam #TamilNadu pic.twitter.com/1n1mEqo0TH
— ANI (@ANI_news) January 23, 2017
சென்னை போராட்டக்காரர்களைப் போன்றே உறுதியுடன் போராடி வரும் மதுரை மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர். அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்று போலீஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, போலீசார் போராட்டக்காரர்களுடன் தமுக்கம் மைதானத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. இதனையடுத் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல 5 நிமிடங்கள் போலீசாரால் கொடுக்கப்பட்டது. மக்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications