சென்னை, மதுரையில் அடுத்த கட்ட போராட்டம் வெடித்தது... ரயில்களை மறித்து இளைஞர்கள் ஆவேசம்
தமிழக அரசுக்கு மெரினா போராட்டக்குழுவினர் விதித்த கெடு 12 மணி வரையுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தை இளைஞர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பகல் 12 மணி வரை தமிழக அரசுக்கு கெடு விதித்திருந்தனர். ஆனால் 12 மணியை கடந்தப் பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னையில் போராட்டக்குழுவினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்றார். இன்று பிரதமரை நேரில் சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பேசினார்.

ஆனால் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற முடியாது என பிரதமர் கைவிரித்துவிட்டார். இந்நிலையில் அவசர சட்டம் இயற்றக்கோரி மெரினா போராட்டக்குழு இன்று பகல் 12 மணி வரை கெடு விதித்திருந்தது.
கெடு முடிந்துள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சேலத்தில் காரைக்கால்-பெங்களூரு ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞர்கள் மத்திய அரசுக்கும் பீட்டாவுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
மதுரையிலும் இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications