நீண்ட நாள்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.... ரஜினிகாந்த் பூரிப்பு
பல ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதில் பெறும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு எனது ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேற்று முதல் சந்தித்து வருகிறார். 5 நாட்களுக்கு சந்திக்கவுள்ளார்.
முதல் கட்டமாக கரூர், திண்டுக்கல், குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை நேற்று ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அண்ட விட மாட்டேன்
தொடக்க விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், அரசியலில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என்னுடன் அண்ட விட மாட்டேன். மேலும் ரசிகர்கள் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

21 ஆண்டுகளுக்கு முன்பு
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினியின் மீது அரசியல் சாயம் பூசப்பட்டது. இதனால் அவர் ரசிகர்களுடனான சந்திப்பை நிறுத்திக் கொண்டார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்தார். அதன்பிறகு தற்போதுதான் அவர் சந்தித்து வருகிறார். இதுகுறித்து ரஜினி தெரிவிக்கையில், நீண்ட நாள்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதில் பெறும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

ரசிகர்கள் உற்சாகம்
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்து வருவதால் ரசிகர்களும் உற்சாகமாகியுள்ளனர். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications