நான் ஜீவசமாதி அடைய அனுமதி கொடுங்கள்.. நளினி கணவர் முருகன் திடீர் கோரிக்கை
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் தான் ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று சிறை துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதால் மன உளைச்சலாக உள்ளது. எனவே ஜீவசமாதி அடைய எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முருகன் சிறை துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். தங்களை விடுவிக்க மனு தாக்கல் செய்தும் பலனில்லை.

இந்நிலையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில், 26 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
இதனால் வாழக்கையை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டேன். கடந்த ஜூலை 18-ஆம் தேதியில் இருந்து உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டேன். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
அண்மையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முருகன், சாமியார் தோற்றத்தில் இருந்தார். இந்நிலையில் அவர், ஜீவசமாதி அடைய அனுமதி கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன்னை கருணை கொலை செய்துவிடும்படி அண்மையில் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications