தமிழகத்தை உலுக்கும் ஊழல் முறைகேடுகள்.. மையமாகிப் போன திண்டுக்கல்!
சேகர் ரெட்டியின் கூட்டாளி திண்டுக்கல் ரத்னமும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாஜி கலெக்டர் நாகராஜனும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிக்கியுள்ளார்.
சென்னை: தமிழகத்தை உலுக்கும் ஊழல் முறைகேடுகளில் 'திண்டுக்கல்' மையமாக 'உருவெடுத்திருப்பது' பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி... இந்த பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் கூட்டாளிகள் புதுக்கோட்டை ராமச்சந்திரனும், திண்டுக்கல் ரத்னமும் அடிபட்டனர்...

திண்டுக்கல் ரத்னம்
இப்போது சேகர் ரெட்டியுடன் இணைந்தே புழல் சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர் புதுக்கோட்டை ராமச்சந்திரனும் திண்டுக்கல் ரத்னமும்.. சேகர் ரெட்டியின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் துணையாக இருந்தவர் திண்டுக்கல் ரத்னமும், புதுக்கோட்டை ராமச்சந்திரனும்.

மூவரணி
தமிழகத்தின் மணல் வியாபாரத்தை இந்த மூவரணிதான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான அரசு உதவி பெறும் கல்லூரியான ஜி.டி.என் கலை கல்லூரியையே விலைக்கு வாங்கும் அளவுக்கு சக்திமிக்கவரானார் ரத்னம். திமுக, அதிமுகவின் மாஜி அமைச்சர்களின் கருப்பை வெள்ளையாக்கும் பணியை கச்சிதமாக செய்தவர் திண்டுக்கல் ரத்னம் என்ற பேச்சும் உண்டு. இத்தனைக்கும் அரசு சர்வேயராக வாழ்க்கையை தொடங்கியவர்தான் இந்த ரத்னம்.

நாகராஜன்
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்து 'அம்மா' புகழ்பாடி பெயர்பெற்ற நாகராஜன் ஐஏஎஸ் அதிகாரியும் இப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிக்கியுள்ளார். நாகராஜன் வீட்டில் இருந்து ரூ1.5 கோடி பணம் மற்றும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த காலத்தில் அப்போதைய அமைச்சர் ஒருவரின் உறவினரின் வலதுகரமாக திகழ்ந்தவர் என்ற 'சிறப்புக்குரிய'வராக இருந்தார் நாகராஜன்...

மாஜி அமைச்சர்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே பந்தாடப்பட்டவர்... அவரது சொத்துகளில் பெரும்பகுதியை போயஸ் கார்டன் பறித்தது... அவர் அரசியலைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் புத்துயிர் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications