For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்...சம்பவ இடத்திலேயே இருவர் பலி: வீடியோ

சிவகங்கையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். 12 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர

By Suganthi
Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை கட்டுப்பாடின்றி அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் தினம்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தியாவிலேயே விபத்துகள் அதிகளவில் ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடத்தில் இருக்கிறது.

Sivaganga, Trichy national highways accident

சாலை விழிப்புணர்வு வாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அப்போது சாலை விபத்துகள் குறித்து விழ்ப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருந்தபோதும் சாலை விபத்துகள் அதிகரித்துதான் வருகின்றன.

சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் மானகிரி என்ற ஊரில் இரண்டு கார்கள் வேகமாக வந்துள்ளன. அதில் இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In Sivagangai- Trichy national highways two car clashed each other and 5 persons died there itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X