"நினைத்தது" நல்லபடியாக நடந்து முடிந்தது.. பாஜக ஹேப்பி!
சென்னை: நினைத்தபடி அதிமுகவின் இரு பிரிவுகளும் தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கே ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டதால் பாஜக தரப்பு நிம்மதி அடைந்துள்ளதாம்.
இந்த ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இத்தனை நாட்களாக அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடாமல், அதிமுக அழிந்து விடாமல், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் சிதறிப் போய் விடாமல் கடுமையாக போராடி வந்தது பாஜக.
தற்போது இரு பிரிவு அதிமுகவின் ஆதரவும் உறுதியாகி விட்டதால் பாஜகவின் திட்டத்தின் பெரும்பகுதி நிறைவேறப் போகிறது.

ஜெ. மறைவுக்குப் பின்னர்
ஜெயலலிதா இறந்ததுமே அதிமுக நிர்க்கதியானது (தமிழ்நாட்டு மக்கள் அல்ல). இந்தச் சூழ்நிலையில்தான் பாஜக தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. அதிமுகவிடம் உள்ள மிகப் பெரிய வாக்கு வங்கி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மிக மிக முக்கியம் என்பதால் அப்படியே கொத்தாக அதிமுகவை தன் பக்கம் கொண்டு வர காய்களை நகர்த்தியது.

சீட்டுக்கட்டாக மாறிய அதிமுக
கிட்டத்தட்ட சீட்டுக்கட்டு விளையாட்டு போல மாறியது அதிமுகவின் நிலை. தலைவர்கள் மாற்றம், முதல்வர்கள் மாற்றம், இடை இடையே ரெய்டுகள் என கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து வந்தது. ஆனால் அதிமுக அழியவில்லை, ஆட்சியும் கலையவில்லை. இதுதான் மாஜிக்!

சிந்தாமல் சிதறாமல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஒரு ஓட்டு கூட வீணாகக் கூடாது என்பதே பாஜகவின் பெரும் கவலையாக இருந்தது. அதற்கு அதிமுக ஆட்சி கவிழக் கூடாது. அதேசமயம், அதிமுகவினர் ஒருங்கிணைந்தும் விடக் கூடாது. இப்படி பல விஷயங்களை பாலன்ஸ் செய்து கொண்டிருக்கிறது பாஜக.

இடை இடையே தீபா
இந்த இரண்டு அதிமுகவிலும் தொய்வு ஏற்படும் சமயங்களில் எல்லாம் சொல்லி வைத்தாற் போல தீபா வந்து ஏதாவது புதுப் பிரச்சினையைக் கிளப்பி விடுவார். அதிரடி பேட்டி அல்லது அடிதடி ரகளை என அவர் ஒரு டிராமாவைப் போடுவார். பிறகு வீட்டுக்குப் போய் பதுங்கி அமைதியாகி விடுவார்.

கிட்டத்தட்ட கிளைமேக்ஸ்
இப்போது கிட்டத்தட்டி கிளைமேக்ஸ் வந்து விட்டது. குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி விட்டது. அதிமுகவின் வாக்குகள் முழுமையாக பாஜகவுக்கே போகப் போகிறது. இதைத்தான் பாஜக இதுநாள் வரை எதிர்பார்த்திருந்தது. இப்போது அது நடக்கப் போகிறது.

அப்புறம்!
தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டதாக பொன் ராதாகிருஷ்ணன் வேறு அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்தில் காலூன்றிய பரவசத்தில இருக்கிறது பாஜக. தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் என்னென்ன நடக்கலாம் என்பதை ஊகிக்காத தமிழர்களே இருக்க முடியாது!
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?











Click it and Unblock the Notifications