திருச்சியில் சசிகலா- இளவரசி ஆதரவாளர்கள் மோதல் முற்றுகிறது!
திருச்சியில் சசிகலா, இளவரசி ஆதரவாளர்களிடையிலான மோதல் முற்றி வருகிறதாம்.
திருச்சி: திருச்சியில் சசிகலா, இளவரசி ஆகியோரது ஆதரவாளர்களிடையே மோதல் முற்றி வருவதால் அங்கு விரைவில் மோதல் வெடிக்கும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரிடம் யார் நெருக்கமாக இருப்பது என்பது குறித்து சசிகலாவுக்கும் அவரது அண்ணியான இளவரசிக்கும் போட்டியும் சண்டையும் ஏற்படும் என கார்டனுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதுண்டு.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைமையை யார் ஏற்பது என்பதிலும் இருவருக்கும் போட்டி ஏற்பட்டதாம். தற்போது இது முற்றியுள்ளதாக சொல்கிறார்கள்.

திருச்சியில் அடிதடி
திருச்சியில் வைத்து இப்போது இந்த இரு பிரிவுக்கும் இடையே மோதலாகியுள்ளதாம். அங்கு சசிகலா தரப்பைச் சேர்ந்த மருத்துவர் சிவக்குமார், சசிகலாவின் அக்கா ஆகியோரின் வீடுகள் உள்ளன. இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் வீடும் அங்கேயேதான் உள்ளது. இதனால் திருச்சி அரசியலில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட இருவரும் துடிக்கிறார்கள். திருச்சி எம்.பி. குமார் இளவரசி ஆதரவாளர் ஆவார்.

இளவரசியின் விசுவாசிகள் வசம்
இதைத்தொடர்ந்து உள்ளாட்சி பொறுப்புகள் உட்பட அனைத்தும் இளவரசியின் விசுவாசிகள் வசமானது. இதற்கான உதவிகளை எம்பி குமார் செய்து கொடுத்ததால் இளவரசியின் ஆதரவாளர்களும் குமாருக்கு ஆதரவாக இருந்தது வருகின்றனர்.

சசிகலாவுக்கு இளவரசி எதிர்ப்பு
இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அதிமுக தலைமையை ஏற்றதால் இளவரசி தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. இதனால் இளவரசி ஆதரவாளர்கள் சசிகலா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர்.

சசி படத்தை மறைக்கும் இளவரசி குரூப்
குறிப்பாக சசிகலா படத்தை அவர்கள் எந்த நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்துவதேயில்லை என தெரிகிறது. ஜெயலலிதாவின் திடீர் மரணத்திற்கு பிறகு திருச்சியில் உள்ள அமைச்சர்கள் தாங்கள் தயார்படுத்தியிருந்த காலண்டர்களில் சசிகலா பட ஸ்டிக்கர்களை ஒட்டி கொடுத்தனர்.

சசிக்கு எதிராக போர்க்கொடி
ஆனால் எம்பி குமார் எதையும் மாற்றம் செய்யாமல் அப்படியே கொடுத்தார். சசிகலாவின் தலைமையில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதன் மூலம் இளவரசி ஆதரவாளர்களும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications