பேச்சுவார்த்தைக்கு இன்று நல்ல நாளாம்.. பேசலாமாம்.. சொல்கிறார் சிவி சண்முகம்!
பேச்சுவார்த்தைக்கு இன்று நல்ல நாள் என வைத்திலிங்கம் கூறியதால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியினரும் எடப்பாடி அணியினரும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இதனை காப்பாற்றும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டி வருகிறது.
இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணியும் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை நியமித்தது.

பேச்சால் ஏற்பட்ட தடை
ஏற்கனவே இந்த இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முரணாக பேசியதால் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தடை பட்டது.

கேள்விக்குறியாக இருந்தது
இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது. எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது.

இன்று நல்ல நாள்
இந்நிலையில் அதிமுகவின் அணிகளும் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது, முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி.சண்முகம் இன்று நல்ல நாள், சுபமுகூர்த்த தினம் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என வைத்தியலிங்கம் கூறியதாக தெரிவித்தார்.

சசிகலா பேனர் அகற்றம்
இன்று நல்லநாள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதகா அவர் கூறினார். டிடிவி தினகரன் கைதுக்கும் சசிகலாவின் பேனர் அகற்றப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். மேலும் டிடிவி தினகரனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications