கரூர்,கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சதமடித்த வெயில்- அனல் காற்றால் அச்சம்
தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. கரூரில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் அனல் வறுத்தெடுத்து வருகிறது. கரூர், கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் நகரில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் முழுவதும் வறட்சி நீடிக்கிறது. நீர் நிலைகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை காலம் போல வெப்பமும் சுட்டெரிப்பதால் அனல் காற்றுக்கு அஞ்சி மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்பம் அதிகரிப்பு
கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே தமிழகத்தின் பல பகுதியில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் இன்று மக்களை வாட்டி வதைத்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் அங்கு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சதமடித்த வெயில்
கரூர் பரமத்தியில் 104 டிகிரி, வேலூர், கோவை, தருமபுரி உள்ளிட்ட நகரங்களில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மதுரை, நெல்லை,திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

சென்னை வெப்பம்
தலைநகர் சென்னையில் 93 டிகிரி வெப்பம் பதிவானது. தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 70 டிகிரி கொடைக்கானலில் பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
இயற்கை குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இடியுடன் மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் நாளை முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி கூறியுள்ளது. வட தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னையில் மேக மூட்டமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட மாநிலங்களில் 109 டிகிரி
வட மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. நாடுமுழுவதும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications