ஜெயில்ல இருக்கும் சித்தியை பார்க்க போறேன்.. பரபரப்புக்கு மத்தியில் பெங்களூருக்கு ஓடும் தினகரன்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று பிற்பகல் டிடிவி.தினகரன் சந்திக்கிறார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த புகரில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலைச்சின்னத்தை பெறுவதற்காக டெல்லி தொழிலதிபர் ஒருவரை பிடித்து 1.30 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக டிடிவி.தினகரனிடம் விசாரிக்க டெல்லி போலீசார் நாளை சென்னை வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் மறுப்பு
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றும், சுகேஷ் சந்திரா யாரென்று தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

பெங்களூரு செல்கிறார்
கட்சியை அழிக்க சிலர் முயற்சித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க இன்று பெங்களூரு செல்ல உள்ளதாகவும் டிடிவி.தினகரன் கூறினார்.

2 மணிக்கு சந்திப்பு
இன்று பிற்பகல் 2 மணிக்கு டிடிவி.தினகரன் சசிகலாவை சந்திக்கிறார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், ஆர்கேநகர் இடைத்தேர்தல், எடப்பாடி அரசின் செயல்பாடு, இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்தது உள்ளிட்டவை தொடர்பாக பேசுவார்கள் என தெரிகிறது.

ஏற்கனவே சசிகலா அதிருப்தி
ஏற்கனவே டிடிவி.தினகரன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது சசிகலா அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்கவுள்ளார். டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தமிழக அரசியலலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூலாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications