சென்னையில் தண்ணீர் பிரச்சினை... ஏப்ரலில் தேர்வுகளை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதனால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே செமஸ்டர் தேர்வுகளை முடித்து விட அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெ
சென்னை: சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அபாயகட்டத்தில் உள்ளது. வீராணம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கடந்த ஆண்டு நீர் நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது.
ஆங்காங்கே தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. இந்த தண்ணீர் தட்டுப்பாடு அண்ணாபல்கலைக்கழகத்தையும் விட்டு வைக்கவில்லை. சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை வைத்து பாடங்களை முடித்து விட்டு ஏப்ரல் 2வது வாரத்திற்குள் கோடைக்கு முன்பாக தேர்வுகளை நடத்திவிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 37 ஹாஸ்டல்கள் உள்ளன. இதில் 7500 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மொத்தம் தினசரி 8 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விடுதிக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் ஹாஸ்டலுக்கும், ஆசிரியர்கள், ஊழியர்கள் குடியிருப்புகளுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இப்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் 24 மணிநேரமும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இப்போது காலை 5.30 மணிமுதல் 9.30 மணிவரையிலும் இரவு 5.30 முதல் 6.30 மணிவரை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தனியார் குடிநீர் லாரிகள் மூலமே தண்ணீரை பெற்று சமாளிப்பதாக அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தை மாதத்திலேயே தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியுள்ள நிலையில் பங்குனி, சித்திரை மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும் போது தண்ணீர் பிரச்சினை அதிகரிக்கும், இதனால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி சுமையும் ஏற்படும் என்பதால் விரைவாக பாடத்திட்டங்களை முடித்து விட்டு விடுமுறைகளை விட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications