அடிமடியிலேயே கைவைக்கப் போய்.... சசிகலா கோஷ்டியை டெல்லி ஓட ஓட விரட்டுவதன் 'பகீர்' பின்னணி
சென்னை: சசிகலா கோஷ்டியை அதிமுகவில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என டெல்லி கங்கணம் கட்டுவதன் பகீர் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே அதிமுக, தமிழக அரசு விவகாரங்களை டெல்லி கையிலெடுத்துக் கொண்டது. இதற்கு செக் வைக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரை துணைக்கு அழைத்தார் சசிகலா கணவர் நடராஜன்.
ஜெயலலிதாவைப் பார்க்க ராகுல் காந்தியும் வந்தார். அதிமுகவுக்கு ஆதரவு குரலையும் ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருந்தார். இதை டெல்லி விரும்பாமல் சாட்டையை சுழற்றியது.

சிறையில் சசி
இதன்பின்னரும் சசிகலா கோஷ்டி அடங்காமல் ஆட்டம் போட்டது. விதி வலியது என்பது போல சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை இப்போது அனுபவிக்கிறார் சசிகலா. இருந்தபோதும் சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகதான் என்பதில் டெல்லி இவ்வளவு பிடிவாதம் பிடிப்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

காங்கிரஸ்
டெல்லியுடன் இணக்கமாக இருப்பதாக போக்கு காட்டிக் கொண்டே படுபயங்கரமான லாபிகளில் களமிறங்கியிருக்கிறார் சசிகலா கணவர் நடராஜன். காங்கிரஸ் கட்சியின் மூலமாக டெல்லியின் நடவடிக்கைகளுக்கு செக் வைக்க முழு முயற்சியில் நடராஜன் ஈடுபட்டார். இருந்தபோதும் திமுகவுக்காக காங்கிரஸ், சசிகலா கோஷ்டியை காப்பாற்ற கை கொடுக்கவில்லை.

சு.சுவாமி
ஆனாலும் மனதளராத நடராஜன் காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பேசி வந்துள்ளார். அதேநேரத்தில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மூலமாகவும் சில நகர்வுகளை நடராஜன் முன்னெடுத்திருக்கிறார்.

மத்திய அமைச்சர்கள்
இவைமட்டுமின்றி டெல்லி மேலிடத்துக்கு ஆகாத மத்திய அமைச்சர்களையும் தங்களுக்கு ஆதரவாக வழிக்கு கொண்டு வரும் உச்சகட்ட வேலைகளையும் நடராஜன் தரப்பு லாபி செய்து வந்துள்ளது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் நமக்கு செக் வைக்க சதி செய்கிறதே இந்த கோஷ்டி என்கிற கடுப்பில்தான் 'வேட்டை' 'வேட்டை' என வெடித்து கிளம்பியதாம் டெல்லி.
அடிமடியிலேயே கைவைத்தால் சும்மா இருப்பாங்களா?
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications