"சசி அத்தை... சசி அத்தை" என்று கூறிய தீபக் திடீரென "அம்மா" என கூறுவது ஏன்??
வாய்க்கு வாய் சசி அத்தை என்று கூறி வந்த மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், திடீரென சசிகலாவை தாய் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சசி அத்தை என்று வாய் நிறையக் கூறுகிறார் தீபக்... இது தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் பேட்டியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலாவை எப்படி அழைப்பார் என்று நெறியாளர் ரங்கநாத் பாண்டே கூறியது. ஆனால் இப்போது அதே தீபக் சசிகலாவை தாய் என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இத்தனை நாட்களாக அத்தை என்று கூறி வந்தவர் திடீரென அம்மா என்று அழைக்க ஆரம்பித்திருப்பதன் பொருள் என்ன என்ற பெரும் விவாதம் வெடித்துக் கிளம்பியுள்ளது.

அதிமுகவின் அடுத்த வாரிசாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் தீபக்கின் சகோதரி தீபா தீவிரமாக உள்ள நிலையில் அதை முறியடிக்க சசிகலா தரப்பு தீபக்குக்கு இப்படி கூறுமாறு குறிப்பு ஏதேனும் கொடுத்துக் களம் இறக்கி விட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தவர் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன், தீபக். அவரோடு சேர்ந்து ஜெ. தோழி சசிகலாவும் ஈமக் கிரியைகள் செய்தார். ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தீபக்கையும் தன்னுடேயே தனது கஸ்டடியில் வைத்திருந்தார் சசிகலா. இதுவும் கூட அப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு தீபக் அளித்த பேட்டியில், சசிகலா எனது அம்மா போன்றவர். அவர் எனது தாய். எனவே அவருடன் பேசிக் கொள்வீர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தந்தி டிவிக்கு தீபா ஒரு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரை பேட்டி கண்ட ரங்கநாத் பாண்டே கூறுகையில் வாய்க்கு வாய் சசி அத்தை சசி அத்தை என்று கூறுகிறார் தீபக் என்று கூறியிருந்தார். ஆனால் தீபக்கோ சசிகலாவை தனது தாய் என்று கூறியுள்ளார். அத்தை எப்படி திடீரென அன்னை ஆனார் என்ற சலசலப்பு எழுந்துள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications