கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி... மேடவாக்கம் இன்ஜினியர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த இன்ஜினியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்
சென்னை: மேடவாக்கத்தைச் சேர்ந்த இன்ஜினியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகியுள்ளது.
திட்டமிட்டு கணவனை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் கொன்றதாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அறிவழகனின் மனைவி சுரேகா மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த அறிவழகன் ராயப்பேட்டையில் உள்ள தனியார் தியேட்டர் மாலில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுரேகா என்ற மனைவியும் சாதனா என்ற 4 வயது மகளும் உள்ளனர்.
கடந்த 3ம் தேதி இரவு இவர்கள் வீட்டுக்கு அருகே அறிவழகன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். சுரேகா வெட்டு காயத்தோடு கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயக்கநிலையில் இருந்த சுரேகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரத்தில் விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் மருத்துவமனையில் இருந்த சுரேகாவிடம் விசாரித்தனர். அப்போது புத்தாண்டு அன்று மது அருந்திய சிலரை அறிவழகன் தட்டிக் கேட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மீண்டும் வீட்டிற்கு வந்து அறிவழகனை கொன்றதாகவும் கூறினார்.

சுரேகா பக்கம் திரும்பயி சந்தேகம்
இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த ஏரியாவில் கும்பலாக யாரும் அன்று சுற்றி திரியவில்லை என்பதும், சுரேகா கூறியது பொய் என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுரேகாவிடம் போலீசார் அதிரடியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

கணபதியுடன் கள்ளக்காதல் மலர்ந்தது
அதில் சுரேகா, அதேப் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும் தனக்கும் கள்ளக்காதல் இருந்ததாக தெரிவித்தார். இதனால் கணவன் அறிவழகனுடன் வாழப்பிடிக்கவில்லை என்றார்.

தீர்த்துக்கட்ட திட்டம்
அறிவழகன் தங்களின் காதலுக்கு இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து அறிவழகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக சுரேகா கூறினார். சாப்பாட்டில் விஷம் வைத்தோ அல்லது தூக்க மாத்திரைகளை கொடுத்தோ கொலை செய்யலாமா என இருவரும் யோசித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிடைத்த சந்தர்ப்பம்
இந்த நேரத்தில் தான் புத்தாண்டின் போது அப்பகுதியில் மது அருந்திய சிலரை அறிவழகன் தட்டிக் கேட்டுள்ளார்.இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சுரேகாவும் கள்ளக்காதலன் கணபதியும், அறிவழகனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

தலையனையால் அமுக்கி கொலை
அதன்படி கடந்த 3ஆம் தேதி இரவு கணபதியை வீட்டிற்கு வரவழைத்த சுரேகா, அவருடன் சேர்ந்து தலையனையால் அறிவழகனை அமுக்கியுள்ளனர். அப்போது அவர் திமிறியதால் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.

போலீசை திசை திருப்ப முயற்சி
மேலும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வீட்டிற்கு வெளியே அறிவழகனின் உடலை தூக்கிசென்று போட்டதாகவும் அருகில் மதுப்புட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர்களை வீசிவிட்டு மது குடித்த வாலிபர்களே கொலையை செய்ததாக கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சுரேகாவையும் அவரது கள்ளக்காதலன் கணபதியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தவிக்கும் குழந்தை
இன்ஜினியர் அறிவழகன், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டபோது அவரது 4 வயது மகள் சாதனா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். தற்போது தந்தையையும் இழந்து தாயையும் இழந்து அந்த சிறுமி தவித்து வருகிறார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்றுவிட்டு நாடகமாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!












Click it and Unblock the Notifications