இந்தியா வர பிளான் போடும் டொனால்ட் டிரம்ப்.. எப்போது தெரியுமா? அமெரிக்க அதிபரே சொன்ன தகவல்
வாஷிங்டன்: ‛‛பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகளவில் நிறுத்தி உள்ளார். அவர் என்னுடைய நண்பர். நாங்கள் இருவரும் பேசுகிறோம். பிரதமர் மோடி பெரிய மனிதர். இந்தியாவுக்கு நான் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நான் செல்வேன்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் டிரம்ப் இந்தியாவுக்கு எப்போது வர திட்டமிட்டு வருகிறார் என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு நம் நாடு செவிசாய்க்காமல் இருந்த நிலையில் தற்போது ஓரளவு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் தொடர்பான ஒப்பந்தத்தை நிறத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அமெரிக்கா - இந்தியா இடையே நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛அவர் (பிரதமர் மோடி) ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகளவில் நிறுத்தி உள்ளார். அவர் என்னுடைய நண்பர். நாங்கள் இருவரும் பேசுகிறோம். பிரதமர் மோடி பெரிய மனிதர். இந்தியாவுக்கு நான் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நான் செல்வேன்'' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு செல்வீர்களா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛இருக்கலாம்.. ஆமாம்'' என்று பதிலளித்தார். இதனால் தான் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
முன்னதாக வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் அளித்த பேட்டியில், ‛‛இந்தியா உடனான உறவை ஆழப்படுத்த டிரம்ப் விரும்புகிறார். ஏனென்றால் அமெரிக்காவுக்கான முக்கியமான பார்ட்டனராக இந்தியா உள்ளது. இந்தியா - அமெரிக்கா உறவு பற்றி டிரம்ப் பாசிட்டிவ் எண்ணம் வைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு கூட பிரதமர் மோடியுடன் பேசினார். ஓவல் அலுவலகத்தில் இந்தியாவின் உயரதிகாரிகளுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார்'' என்று கூறியிருந்தார்.
இதன் அடுத்தக்கட்டமாக தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் அடுத்த ஆண்டு நம் நாட்டுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக தற்போதைய சூழலில் சீனாவிடம் நம் நாடு நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இதனை டிரம்ப் விரும்பவில்லை. இதனால் விரைவில் அவர் நம் நாட்டுக்கு வந்து சீர்குலைந்த உறவை மீட்டெடுக்க முயற்சிப்பார் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
-
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்!










Click it and Unblock the Notifications