For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான் .
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
புருவ மாங்கு துடிக்கச் சினத்தின்
வெறித லைக்க, மதிமழுங்கிப் போய்
வேந்தன் இஃது விளம்புத லுற்றான். (3)
வேறுநன்றி கெட்ட விதுரா! - சிறிதும் நாண மற்ற விதுரா!
தின்ற உப்பினுக்கே - நாசந் தேடுகின்ற விதுரா
அன்று தொட்டு நீயும் - எங்கள் அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான் - எந்தை மதியை என்னுரைப்பேன்! (4)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]