மக்கள் தொகையில் சீனாவை முந்தவுள்ள இந்தியா!

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மத்திய அரசின் சுகாதார ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொகை ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்:
கடந்த 100 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 5 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 0.6 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இதே வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்தால் 2050ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும்து.
2009ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகை 119.8 கோடியாகவும், சீன மக்கள் தொகை 134.5 கோடியாகவும், பாகிஸ்தான் மக்கள் தொகை 18 கோடியாகவும் இருந்தன.
வரும் 2050ம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை 161. 38 கோடியாகவும், சீனா மக்கள் தொகை 141. 7 கோடியாகவும் இருக்கும்.
இந்தியாவின் சில குறிப்பிட்ட மாநிலங்களின் மக்கள் தொகை மட்டும் சில நாடுகளின் மக்கள் தொகையையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் தொகை 18.3 கோடி. இது கிட்டத்தட்ட பிரேசில் நாட்டு மக்கள் தொகைக்கு இணையானதாகும்.
மகாராஷ்ட்டிரா மக்கள் தொகையான 10. 4 கோடி, மெக்சிகோவுக்கும், பிகார் மாநில மக்கள் தொகையான 9 கோடி ஜெர்மனியின் 8. 3 கோடி மக்கள் தொகையைவிட அதிகம்.
2026ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உத்தரப் பிரேதத்திலும், 8 சதவீதம் பேர் பிகாரிலும், 7 சதவீதம் பேர் மத்திய பிரதேசத்திலும், இன்னொரு 7 சதவீதம் பேர் ராஜஸ்தானிலும் இருப்பர்.
தென் மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 13 சதவீதமாக இருக்கும். சிறப்பான கல்வியறிவு மூலம் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளத்திலும் தமிழகத்திலும் மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது உலக நாடுகளில் பரபரப்பளவில் 2.5 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், உலகின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நம் நாட்டில் தான் வசிக்கின்றனர்.
கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை-அரசு:
இந் நிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படு்த்த அரசு எந்த புதிய திட்டத்தையும் அமல்படுத்தாது என்று மத்திய நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
சிறிய குடும்பத்தின் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டப்படும், அதே நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடை தீவிரமாக்க அமலாக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications