வேலூர் வாசகர் பேரவை ஆழி அறக்கட்டளையின் நூலாறு 2010 கணித்தமிழ் அரங்கு
வேலூர்: வேலூரில் தொடங்கி உள்ள நூலாறு 2010 வேலூர் புத்தகத் திருவிழாவில் கணித்தமிழ் வரலாறு என்ற தலைப்பின் கீழ் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில், தினமும் பள்ளி மாணவர்களுக்கும் மாணவ/மாணவிகளுக்கும் , கல்லூரி மாணவ /மாணவியர்கள் மற்றும் பொது மக்களும் தினமும் தமிழில் தட்டச்சு செய்தல் , வலைப்பூ உருவாக்குதல், லினக்ஸ் ஆபிரேட்டிங் சிஸ்டம் நிறுவுதில் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் கணித்தமிழ் வரலாறு என்ற தலைப்பின் கீழ் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கணினியில் தமிழ் மென்பொருட்கள் எப்போதிலிருந்து வெளிவந்தது போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வரும்காலத்தில் தமிழியில் என்ன மாதிரியான மென்பொருட்களும் வரவிருக்கின்ற போன்ற தகவல்களும் இடம்பெறுகிகின்றன.
தமிழ் விக்கிபீடியா கட்டுரைப்போட்டி:
மேலும் பள்ளி மாணவ/மாணவியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரைப்போட்டியும் அதற்கான பரிசுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
மொபைல் திருக்குறள்:
விஐடி- பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் மொபைல்வேதா நிறுவனம் சார்பில் திருக்குறளை இலவசமாக செல்பேசியில் படிக்கும் விதமாக ப்ளூ-டூத் நுட்பம் வழியாக பார்வையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
மென்பொருள் தொழில் வாய்ப்பு கருத்தரங்கு:
முக்கிய நிகழ்வாக வேலூரில் மென்பொருள் துறை நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கோட்டைகளான பெங்களூருவுக்கும் சென்னைக்கும் நடுவில் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுவதற்கான ஆதாயங்கள் இருக்கின்றன.
மாவட்டத் தலைநகராக, ஒரு சிறுநகராக கருதப்பட்டு வரும் வேலூரில் என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும், அரசாங்கம் என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும்என்பது விவாதிக்கப்பட வேண்டும்.
வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து தகவல்
தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கருத்து என்ன, இங்கு
இருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நோக்கங்கள் என்ன?
சென்னை அல்லது பெங்களூருவில் செயல்படும் மென்பொருள் நிறுவனம் ஒன்று
வேலூரில் மென்பொருள் உருவாக்க மையம் ஏற்படுத்த வேண்டுமானால் என்னென்ன எதிர்பார்ப்பார்கள்?
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான
தகவல் தொழில் நுட்பத் தேவைகள் இருக்கின்றன?
இவற்றை விவாதித்து ஒரு செயல்திட்டம் வகுக்கும் நோக்கத்தில்
1. வேலூர் மாவட்டத்தில் கிடைக்கும் மனிதவளம் பற்றிய தகவல்கள் -
மாவட்டத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி பிரதிநிதி
2. வேலூரில் நிறுவனக் கிளை ஏற்படுத்தத் தேவைப்படும் வசதிகள் -
சென்னை/பெங்களூருவில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனப் பிரதிநிதி
3. வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்கி நடத்தும் நடைமுறைச்
சாத்தியங்கள் - வேலூரில் செயல்படும் சிறு நிறுவன பிரதிநிதி
4. வேலூர் மாவட்ட நிர்வாகம் மென்பொருள் நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட
உதவிகளைச் செய்ய முடியும் - மாவட்ட நிர்வாகப் பிரதிநிதி
5. வேலூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத் தேவைகள் -
வேலூரைச் சார்ந்த வணிக /தொழில் நிறுவனப் பிரதிநிதி
6. தகவல் தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான தேவைகள் - தகவல்
தொழில்நுட்பத் துறை வல்லுனர் என்று ஆறு பேர் கொண்ட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் நகரின் கல்லூரி மாணவர்கள், வேலூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மாவட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்க விரும்பும் தொழில் முனைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பலன் பெறலாம்.
மேலும் விபரங்கள் அறிய,
செந்தில்நாதன், விழா ஒருங்கிணைப்பாளர்- 99401-47473, ஆழி அறக்கட்டளை
செல்வ.முரளி - 99430-94945
மா.சிவக்குமார் – 98840-70556 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications