For Daily Alerts
Just In
செம்மொழி மாநாட்டு கவிதை போட்டியில் பங்கேற்க விருப்பமா?
கோவையில் ஜூன் 23ம் தேதி தொடங்கவுள்ள, இந்த மாநாட்டையொட்டி "சங்கத் தமிழ் அனைத்தும் தா'' என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலான பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழு இந்தப் போட்டியை நடத்துகிறது.
இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.
கவிதைகளை அனுப்ப வயது வரம்பு இல்லை, ஒரு பக்க அளவில், 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருக்க வேண்டும். மரபுக் கவிதையாகவோ, புதுக் கவிதையாகவோ இருக்கலாம்.
கவிதைகளை [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பலாம்.
தபால் மற்றும் மின்னஞ்சலில் அனுப்புவோர் மே 20ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டும்.
Story first published: Saturday, May 1, 2010, 11:20 [IST]