தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று "வித்தாக விளங்கும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
அதில் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:
மொழி தான் மக்களின் பண்பாட்டையும், ஓர் இனத்தின் பண்பாட்டையும் கட்டமைக்கிறது. தாய்-தந்தை பேண் என்ற தனி மனித அறத்தையும், செல்வத்துப் பயனே ஈதல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் போன்ற சமூக அறத்தையும், உலகம் உண்ண உண் என்ற உலக அறத்தையும் மொழி நமக்கு கற்றுத் தருகிறது.
அதனால் தான் இதற்கெல்லாம் மொழி வித்தாக விளங்குகிறது என்று கூறுகிறோம்.
எல்லா அறத்திலும் மேன்மையான அறம் சமத்துவம் தான். நம் மாநாட்டின் குறிக்கோள் வரியும் கூட அதைத்தான் வலியுறுத்துகிறது. "பிறப்பொக்கும் எல்லோ உயிர்க்கும்'' என்ற குறிக்கோளை முதல்வர் ஆழ்ந்து சிந்தித்தே அமைத்திருக்கிறார்.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பது இந்த மாநாட்டின் குறிக்கோளாக முன்னிறுத்தப்பட்டுள்ளது. சமத்துவம் மறுக்கப்படும்போது போராட்டம் வெடிக்கிறது.
எங்கெல்லாம் சமத்துவம் மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடித்துள்ளன என்பதை உலக வரலாறுகள் கூறுகின்றன.
சமீபத்தில் விடுதலை அடைந்தது எரித்திரியா நாடு. அந்த மக்கள் பேசிய மொழியின் நூல்களை தீ வைத்துக் கொளுத்தியதால் அங்கு விடுதலைப் போராட்டம் வெடித்தது. அங்கே மொழிக்கு வைத்த தீ விடுதலைத் தீயாக மாறியது.
அதேப்போல 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தில் 97,000 தமிழ் நூல்களையும் அரிய ஓலைச் சுவடிகளையும் தீ வைத்து கொளுத்தினார்கள்.
வங்கதேசம் கூட மொழி அடிப்படையில் தான் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து விடுதலை பெற்றது. எனவே ஓர் இனத்தின் அடிப்படை வித்தாக விளங்கும் ஆற்றல் மொழிக்குத்தான் உண்டு.
இந்த மாநாடு மிகப்பெரிய தொடக்கம். இதனை அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களும் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த மாநாட்டுக்கு பிறகு தமிழர்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும். தாய் மொழியை போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை என்றார் சுப. வீரபாண்டியன்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications