இலவசம் பெறுவதை தவிர்க்கவேண்டும்-திருவாடுதுறை ஆதீனம் அறிவுரை
மயிலாடுதுறை: பிறரிடம் இலவசங்களை பெறும் பழக்கத்தை மக்கள் கைவிடவேண்டும். அதேபோல், தானம் தர விரும்புவோர் தங்கள் சொந்த உழைப்பில் கிடைத்ததை தரவேண்டும் என திருவாடுதுறை ஆதீனம் கூறினார்.
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான கோமுத்தீசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது.
திருஞானசம்பந்தர் பஞ்சமூர்த்திகளுடன் பல்லக்கில் ஊர்வலமாக வீதியுலா வந்தார். இதைத் தொடர்ந்து, கோயிலில் 15க்கும் மேற்பட்ட ஒதுவார்கள் திருப்பதிகம் பாடினர்.
பொற்காசுகளை கோயில் பலிபீடத்தில் வைத்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, திருஞானசம்பந்தர் உலவாக்கிழி பெறும் காட்சி நடைபெற்றது.
விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியர் கலந்துகொண்டு பேசுகையில்,
குறைந்த உழைப்பில் அதிக பொருளை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில், குறுக்கு வழியில் செல்வத்தைச் சம்பாதிக்க பலர் ஆசைப்படுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.
பல்வேறு தரப்பினராலும் இலவசமாக தரப்படும் பொருள்களை வாங்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். தன்னுடைய உழைப்பின் மூலம் கிடைத்த பொருளையே அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்பதையும் மக்கள் உணரவேண்டும்.
கிடைத்த பொருளை அனைவருக்கும் கொடுப்பவரே அருளாளர் என அழைக்கப்படுகிறார். இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களிலும் அருளாளர்கள் உள்ளனர்.
அடுத்தவர் நலனுக்காக வேள்வி செய்வதற்கு பொருள் வேண்டும் என்ற நோக்கில் பெருமானைப் பாடிய திருஞான சம்பந்தர், 11 பதிகங்களை பாடித்தான் பொருளைப் பெற்றாரே தவிர, உழைக்காமல் பொருளை பெறவில்லை.
இதிலிருந்து மக்கள் உழைத்துதான் பொருளைப் பெற வேண்டும் என்பதை சமுதாயத்தின் முன்னோடியாக இருந்து வழிகாட்டியுள்ளார் திருஞானசம்பந்தர் என்பது தெரிய வருகிறது என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications