பொங்கல்: தென்மாவட்ட ரயில்கள் நிரம்பின-கூடுதல் சிறப்பு பயில்கள் விட கோரிக்கை
நெல்லை: பொங்கல் பண்டிகைக்கான தென்மாவட்ட சிறப்பு ரயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை சீசனுக்காக தெற்கு ரயில்வே பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயி்ல்கள் விட்டுள்ளது.
எத்தனை சிறப்பு ரயில்கள் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. தென்மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் இடங்கள் இல்லை. பொதிகை, நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, கன்னியாகுமரி, பாண்டியன், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன.
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, 13, 14 ஆகிய இரு நாட்களிலும் காத்திருப்போர் பட்டியல் 200ஐ தாண்டியது. 16-ம் தேதி ஞாயிற்று கிழமை மாட்டு பொங்கலும், 17-ம் தேதி திங்கள் கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் வருவதால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே பயணம் செய்ய திட்டமிட்டதையடுத்து ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் இடமில்லை.
தென்மாவட்டங்களுக்கு வழக்கமாகச் செல்லும் சில ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகமானதல் முன்பதிவு நிறுத்தப்பட்டது. அதனால் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications