குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையினரின் உம்ரா பயணம்
Subscribe to Oneindia Tamil

2 பேருந்துகளில் 96 பேர் குவைத்தில் இருந்து கிளம்பினர். ஐந்து நாட்கள் புனித மக்காவிலும், மூன்று நாட்கள் புனித மதினாவிலும் இருக்குமாறு தங்களது பயணத் திட்டத்தை அமைத்திருந்தனர். பத்ர் யுத்தம் நடந்த இடத்திற்கும் உம்ரா பயண குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையின் நிர்வாகிகள் துணைத் தலைவர் நாச்சிகுளம் டிவிஎஸ் அலாவுதீன் தலைமையில் ஜித்தா தமிழ்ச் சங்கத்திற்கு சென்றனர்.
இரு அமைப்புகளின் நிர்வாகிகளும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இரு தரப்பு உறவினை மேம்படுத்துவது என்றும், கலாச்சார பரிவர்த்தனை மெற்கொள்வது என்றும் முடிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications