For Daily Alerts
Just In
இளைஞர்களுக்கு கர்நாடக இசை மீது ஆர்வம் இல்லை: கரூர் மாவட்ட நீதிபதி ஜெயசங்கரன் வேதனை
கரூர்: இன்றைய இளைய தலைமுறையினர் கர்நாடக இசையை ரசிப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை என்று கரூர் மாவட்ட நீதிபதி ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.
கரூர் நாரத கான சபாவின் 68வது ஆண்டு விழா அதன் தலைவர் ஜனார்த்தனம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட நீதிபதி ஜெயசங்கரன் சிறப்பு மலரை வெயிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
எந்த காலத்திலும் மக்களுக்கு இசை மீது ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் தற்போது மேலை நாட்டு கலாச்சாரம், மேலை நாட்டு இசை காரணமாக நமது நாட்டில் கர்நாடக இசை மீதான ஆர்வம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது.
குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் கர்நாடக இசையை ரசிப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. அவர்களிடையே கர்நாடக இசையின் வலிமையை உணர்த்த இது போன்ற சபாக்கள் தான் தற்போது பாடுபட்டு வருகிறது என்றார்.
Comments
English summary
Karur district judge Jayasankaran told in a function that today's youth doesn't have interest in carnatic music because of the impact of western music.
Story first published: Tuesday, August 7, 2012, 15:36 [IST]