500 ஆய்வுக் கட்டுரைகள்.. உலக அறிஞர்கள் பங்கேற்பு.. ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியும், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து "தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள்" என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை வரும் புதன் கிழமை நடத்துகின்றன.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, சிங்கப்பூரைச் சேர்ந்த இக்சியா தொடர்பகத்தின் இயக்குநர் இரவிச்சந்திரன் சோமு கலந்து கொள்கிறார். எழுத்தாளர் மாலன் கருத்தரங்கைத் தொடக்கி வைக்கிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.எ. முஸ்தபா கருத்தரங்க ஆய்வுக் கோவைகளை வெளியிடுகிறார். தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் எழுத்தாளர் ஷாநவாஸ் கருத்துரை வழங்குகிறார்.

கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் மீ.அ.ச. ஹபிபூர் ரஹ்மான் வரவேற்புரையும், கல்லூரிச் செயலர் முனைவர் காஜா நஜீமுதீன் சாஹிப் வாழ்த்துரையும் வழங்க உள்ளனர்.
500 ஆய்வுக் கட்டுரைகள்.. உலக அறிஞர்கள் பங்கேற்பு.. ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் pic.twitter.com/Ao578PuUHL
— Oneindia Tamil (@thatsTamil) January 9, 2017
கருத்தரங்கில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்க உள்ளனர். ஆய்வரங்க அமர்வுகள் தனித்தனி அமர்வுகளாக நடைபெறும் மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பன்னாட்டுக் கருத்தரங்கின் மதிப்பீட்டு உரையைப் புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் வழங்குகிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் நிறைவு உரையாற்ற உள்ளார்.
ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கின் இறுதியாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. சிராஜூதீன் நன்றியுரையாற்றுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications