நினைத்துப் பார்க்கிறேன்
அவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைக் கூடஎவராலும் உச்சரிக்க முடியாதே. வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ?
ஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்தஎத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.
தன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம்பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.
பிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது
நெத்தியெங்கும் பூப்பூக்க நெஞ்சமெங்கும் தேன்வடிய முத்துமுத்துக் கண்மயங்க முந்தானை தான்விலக புத்தம்புதுச் சுகங்கோடி கொஞ்சல்மொழித் தேன்குடமே கொஞ்சநஞ்சம் இருந்தாலும் மச்சான் என் மனம்போல உச்சிநிலா முகக்கனியில் என்னருகில் நீவந்தால் எண்ணாத எதையோநான் மன்மதனோ நானாக பொன்னாகப் பூவாகப் மண்மீது பொழியாத கண்ணுக்குள் விரியாத கனவுகளில் வரச்சொல்லி இனிக்காத இவைபோன்ற ஈராறு மாதங்கள் சிறுகன்றைப் போல்துள்ளிச் |