மெளனமாய் அழுகிறேன்!
அலை ஓய்ந்தது- மன
அலைகள் ஓயவில்லை.
குடிக்க நீரின்றி அல்லல் பட்டோம்
நீர் குடித்ததால் இன்று அவதிப்பட்டோம்.
இப்பேரழிவை எண்ணிப் பார்க்க முடியவில்லை
இறந்தவர்களை எண்ணியும் பார்க்க முடியவில்லை.
சுனாமி- நீ என்ன எமனின் பினாமியா? வலைவீசி மீன் பிடித்தோரை - பாச வலைவீசி இழுத்து விட்டாயே ராட்சத அலைகள் எங்கள் மனதை ஊர்களை அழித்து விட்டது மாதா கோயிலில் மனித சடலங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வீதியெங்கும் சடலங்கள்- இது குழந்தையின் மரணத்தால் கதறும் உப்பு நீரில் உப்பிய பிணங்கள் உருக்குலைந்த வாகனங்கள் எத்தனை அழிவு எத்தனை பிழிவு... தப்பிய மக்களின் துக்க ஓலங்கள் ஒற்றை சவக்குழியில் ஒருநூறு பிணங்கள் போதும்.. போதும்... போதுமம்மா போதும் தொலைக்காட்சியில் தான் கண்கள் ஓடி ஓடி உதவுகின்ற பிணத்தில் நகை தேடுபவனையும் ஆனால் ஒன்று மட்டும் தெரியவில்லை ஒட்டுமொத்த குடும்பமும் அழிந்துவிட்டதென எல்லோரும் ஓர் நாள் இறப்பது உலக நியதிதான் இறந்தவர்களுக்கு அழுவதா? இருப்பவர்களை தேற்றுவதா? - யாதுமானவள், குவைத்.([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |