எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு- யாதுமானவள்
தமிழர் திருநாளாம்
தைப் பொங்கல் வந்துடிச்சி
ஆரத்தி ஏத்தி வச்சி
ஆண்டவனை கும்பிட
எம்மனசு ஏக்கலே
எனக்கில்ல திருநாளு
பொல்லாத கடலும்
பொங்கி வந்து அழிச்சதாலே
திருநாளு கொண்டாட்டம்
துண்டிச்சு போயாச்சி
என்வூட்டு மக்களெல்லாம்
மண்ணுக்கு போனபின்னே- இனி
பொங்கி வச்சாலும்
திங்க யாரிருக்கா?
போகி பண்டிகைக்கு பழசெல்லாம் போக்கணும்தான் பழசுன்னு நெனச்சு ஒரு வெள்ள அடிச்ச சொவரு ஒண்ணயும் காணோமே வெளஞ்ச பயிர்களின் வெளஞ்ச பயிரெல்லாம் ஆளுக்கு அரக்கிலோ எம்மனசு ஒப்பல மாட்டுப் பொங்கலுக்கு மாவீரன் சுனாமின்னு பாலு பொங்கலான்னா எம்மனசு ஏக்கலே கலர் கலரா துணிபோட்டு கால்தொட்டு கும்பிட்டு அவுத்து கொடுக்கணும்னு காணும் பொங்கலிலும் இனி என்ன கொண்டாட்டம்? எம்மனசு ஏக்கலே - யாதுமானவள், குவைத்.([email protected]) இவரது முந்தைய படைப்பு: 1. மெளனமாய் அழுகிறேன்!
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |