சபரிமலை ஐயப்பன் கோவில்..ஆடி மாத பூஜைக்காக இன்று நடை திறப்பு - மாஸ்க் கட்டாயம்
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைனின் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல , மகர விளக்கு பூஜைகளை தவிர தமிழ் மாதம் பிறக்கும் முதல் நாளன்று மாதம் தோறும் திறக்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளது. தமிழ் மாத பிறப்பை ஒட்டி முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
17ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் . நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும். 21ஆம் தேதி வரை நடை திறந்து இருக்கும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும்.பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதற்கான அனுமதி இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசனம் முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications