ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழா...ரங்கா முழக்கத்துடன் கோலாகல கொடியேற்றம் - 29ல் தேரோட்ட வைபவம்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்ட நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும். மே 1ஆம் தேதியன்று ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.
வைணவ பக்தர்களால் பூலோக வைகுண்டம் என்று பூஜிக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திருப்பதிகளில் முதன்மைத் தலமாகவும் பஞ்சரங்கத்தலங்களில் ஒன்றாகவும் வைத்து போற்றப்படும் முக்கிய ஆலயமாகும்.
இக்கோயிலின் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

சித்திரை திருவிழா கொடியேற்றம்
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்ற வைபவத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வுக்காக அதிகாலை 2:30 மணியளவில், ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் நடைபெறும் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி எனப்படும் மகாதீபாராதனை காட்டப்பட்டது.

ரங்கா... ரங்கா முழக்கம்
அதைத் தொடர்ந்து, நம்பெருமாள் கொடி மரத்திற்கு கோயில் பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்களால் பூஜைகள் செய்யப்பட்டு, மீன லக்னத்தில் அதிகாலை 4:30 மணி முதல் 5:05 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ரங்கா.... ரங்கா... என பக்திப் பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர். இதையடுத்து, நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை அடைந்தார்.

நம்பெருமாள் வீதி உலா
மாலை 6:30 மணியளவில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சித்திரை வீதிகளில் திருவீதியுலா வந்து இரவு 8:30 மணியளவில் சந்தன மண்டபத்தை அடைந்தார். பின்னர் இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை அடைந்தார். திருவிழா நடைபெறும் நாட்களில், நம்பெருமாள் தினமும் காலை, மாலை என இருவேளையும் திருவீதியுலா வைபவம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சித்திரைத் தேரோட்டம்
ஏப்ரல் 27ஆம் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறும். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 30ஆம் தேதியன்று சப்தாவரணமும், மே 1ஆம் தேதியன்று ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடையும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications