ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழா...ரங்கா முழக்கத்துடன் கோலாகல கொடியேற்றம் - 29ல் தேரோட்ட வைபவம்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்ட நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும். மே 1ஆம் தேதியன்று ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.
வைணவ பக்தர்களால் பூலோக வைகுண்டம் என்று பூஜிக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திருப்பதிகளில் முதன்மைத் தலமாகவும் பஞ்சரங்கத்தலங்களில் ஒன்றாகவும் வைத்து போற்றப்படும் முக்கிய ஆலயமாகும்.
இக்கோயிலின் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

சித்திரை திருவிழா கொடியேற்றம்
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்ற வைபவத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வுக்காக அதிகாலை 2:30 மணியளவில், ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் நடைபெறும் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி எனப்படும் மகாதீபாராதனை காட்டப்பட்டது.

ரங்கா... ரங்கா முழக்கம்
அதைத் தொடர்ந்து, நம்பெருமாள் கொடி மரத்திற்கு கோயில் பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்களால் பூஜைகள் செய்யப்பட்டு, மீன லக்னத்தில் அதிகாலை 4:30 மணி முதல் 5:05 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ரங்கா.... ரங்கா... என பக்திப் பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர். இதையடுத்து, நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை அடைந்தார்.

நம்பெருமாள் வீதி உலா
மாலை 6:30 மணியளவில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சித்திரை வீதிகளில் திருவீதியுலா வந்து இரவு 8:30 மணியளவில் சந்தன மண்டபத்தை அடைந்தார். பின்னர் இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை அடைந்தார். திருவிழா நடைபெறும் நாட்களில், நம்பெருமாள் தினமும் காலை, மாலை என இருவேளையும் திருவீதியுலா வைபவம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சித்திரைத் தேரோட்டம்
ஏப்ரல் 27ஆம் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறும். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 30ஆம் தேதியன்று சப்தாவரணமும், மே 1ஆம் தேதியன்று ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடையும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications