For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னி இலை, மாதுளை இலை... விநாயகரை எந்த இலையால் அர்ச்சனை செய்ய என்ன பலன் தெரியுமா?

விநாயகருக்கு அருகம்புல், எருக்கம்பூ உகந்தது. முழுமுதற்கடவுளான விநாயகரை சில இலைகளால் அர்ச்சனை செய்ய பல நல்ல பலன்கள் கிடைக்கும். என்ன இவையால் அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியும் என்று பார்க்

Google Oneindia Tamil News

சென்னை: வன்னி இலை கொண்டு விநாயகரை அர்ச்சனை செய்தால் சொர்க்க வாழ்வு கிடைக்கும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்த சகல சவுபாக்யங்களும் கிடைக்கும்.

விநாயகருக்கு உகந்த தினங்களில், விநாயகருக்கு உகந்த இலைகளைக் கொண்டு அர்ச்சித்தால் அந்த அந்த இலைக்கு உகந்த பலன்களை பெற்று வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழலாம். இதில் மிகவும் சிறந்தது விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த இலை வழிபாட்டை மேற்கொண்டாலும், சங்கட ஹர சதுர்த்தியிலும் இந்த இலை வழிபாட்டை மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

Ganesh Chathurti: These leave Archna for Lord Vinayagar

விநாயகர் சதுர்த்தி, திருவோணம், மகாளய அமாவாசை - செப்டம்பர் மாத விரத நாட்கள்விநாயகர் சதுர்த்தி, திருவோணம், மகாளய அமாவாசை - செப்டம்பர் மாத விரத நாட்கள்

•அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

•முல்லை இலை: அறம் வளரும்

• கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

• விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

• இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.

• ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.

• வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

• நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.

• கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.

• அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

• எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.

• மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்

• விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.

• மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

• தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.

• மருக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

• அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

• ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.

• தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.

• அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

• தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.

English summary
Ganesh Chathurti special Vanni leaves, Arugampul These are leave Archna for Lord Vinayagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X