Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திர கிரகணம்..திருப்பதி, பழனி செல்லும் பக்தர்களே..இதை படிச்சிட்டு போங்க..சாமி தரிசன நேரம் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திர கிரகணம் நிகழ உள்ளதை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பழனி, திருப்பதி உள்ளிட்ட பல முக்கிய கோவில் நடை 10 மணி நேரத்திற்கு மேல் மூடப்பட உள்ளது. கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நேரத்தை அறிந்து வரவும் என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, ​​பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் நிகழும் சந்திர கிரகணமும் பகல் நேரத்தில் நிகழும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும். கடந்த வாரம் 25ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிந்தது.

முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணம்

8 ஆம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருந்தாலும் மாலையில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் பகுதி நேர சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். பொதுவாக கிரகண நேரங்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் தோஷம் காரணமாக பல கோவில்களில் நடை அடைக்கப்பட உள்ளது.

பழனி

பழனி

அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய நாட்களின்போது பழனி மற்றும் அதன் உப கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 8ஆம் தேதி மாலை 5.47 மணி முதல் 6.25 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் பெரியாவுடையார் கோவிலில் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அன்னாபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

பன்னாரி அம்மன் கோவில்

பன்னாரி அம்மன் கோவில்

சந்திர கிரகண நாளில் ஈரோடு மாவட்டம் பன்னாரி மாரியம்மன் கோவிலில் மதியம் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை ஆறரை மணி நேரம் மூடப்பட்டிருக்கும். எனவே அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தங்க கோவில் தரிசன நேரம்

தங்க கோவில் தரிசன நேரம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் நாராயணி கோவில் தரிசன நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். மீண்டும் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்படும்.

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில்

திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8ஆம் தேதி காலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 12.30 மணிநேரம் மூடப்படுகிறது. அதாவது அன்றைய தினம் அனைத்து சன்னதிகளும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கிரகண பரிகார பூஜைகள் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் மேலே குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+