தமிழ் புத்தாண்டு பலன்: மிதுனத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. வாழ்க்கையே மொத்தமாக மாறப்போகுது
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் வெண்பாக்கள் உண்டு. அந்த வெண்பாக்களின்படி இந்த ஆண்டில் விவசாயப் பெருக்கம் ஏற்படும். கால்நடை புரட்சி ஏற்படும். உலகம் முழுவதும் பஞ்சங்கள் நீங்கும். செழிப்பான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், மிதுன ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம் - இந்த தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு ராகவேந்திரருடைய பரிபூரண அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். சனிக்கிழமையில் பசு மாட்டிற்கு உணவு கொடுப்பது அனுகூலத்தை தரும். ரத்த அழுத்தம், ரத்த நாளங்களில் அடைப்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உணவு முறை, மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது.
உத்தியோக மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், படிப்பு மாற்றம் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படுவது அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் பெரிய நிம்மதி ஏற்படும். துணையின் நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். பெரியவர்கள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகளில் பரிபூரண நிவர்த்தி உண்டாகும். குடும்பத்தில் காணப்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உயரும். திருமணத் தடைகள் நீங்கி சுபிக்ஷமான காலகட்டமாக இருக்கும். யோசித்துக் கொண்டே இருந்தால் பிற்காலத்தில் பிரச்சனையை ஏற்படும். இந்த காலத்திலேயே சுப காரியங்களை முடித்துக் கொள்வது நல்லது. குருவின் பரிபூரண அருள் இருக்கக்கூடிய ஆண்டாக இருக்கும்.
உத்தியோகத்தில் வெற்றி ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர், புராஜெக்ட் மேனேஜர் போன்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். விரைய ஸ்தானத்தில் குரு இருப்பதால் பிள்ளைகள் பற்றிய கவலைகள் இரண்டு மாதத்துக்கு உண்டாகும். குரு மாறிய பின்னர் மே மாதத்துக்குப் பிறகு சுப காரியங்கள் உண்டாகும். திருமண யோகம், குழந்தை யோகம் உண்டாகும்.
குரு பார்வை இருப்பதால் பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். உங்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்வதற்கான வாய்ப்பு உண்டாகும். மனைவி, கணவனின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும், குடும்பத்தில் அதீத மகிழ்ச்சியை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். முதல் இரண்டு மாதம் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications