கரும் பூஞ்சைத் தொற்று மருந்து கேட்ட மதுரைக்காரர்.. தமிழக நிதியமைச்சர் அளித்த பதிலால் பரபரப்பு
மதுரை: புதிய தொற்றாக கருதப்படும் கரும் பூஞ்சை தொற்று மதுரையிலும் பரவத் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப நண்பர் மருந்து கேட்டு போட்ட டுவிட்டர் தகவலுக்கு மறு பதில் அளித்துள்ள தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மருந்து கிடைப்பது சவாலாக உள்ளதாக கூறியுள்ளார்
Recommended Video
கொரோனா பெருந்தொற்றின் 2ஆவது அலை கடும் பாதிப்பை தமிழகம் முழுவதும் உருவாகி வரும் நிலையில், அதனுடன் மற்றொரு புதிய கரும்பூஞ்சை தொற்று மதுரையிலும் பரவத் தொடங்கியுள்ளது என்ற தகவல் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து மர்ஜோஸ் என்பவர் தனது டுவிட்டரில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மியூகோர் மைகோஸிஸ் எனும் கரும்பூஞ்சை தொற்று பரவி வருகிறது. ஆனால் இது குறித்த போதுமான தரவுகள் நம்மிடம் இல்லை. எனது நண்பரின் தாயாருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதற்கு உரிய மருந்தினைப் பெற்றுத் தர வேண்டுகிறேன் என தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மருத்துவர் எழிலன் உள்ளிட்டோருக்கு பதிவிட்டிருந்தார்.

அரவிந்த் கண் மருத்துவமனை
இதற்கு டுவிட்டரில் பதிலளித்த தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், இதனை பொதுமக்களுக்கான எச்சரிக்கையாக கருத வேண்டும். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையினரும் இதுகுறித்து என்னை தொடர்பு கொண்டார்கள். உரிய மருந்து பெற்றுத் தருவதற்கு கடுமையாக முயற்சி மேற்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

விலை அதிகம்
50 நபர்களுக்கு கரும்பூஞ்சைத் தொற்று..மருந்து மருந்து தேவைப்படுவதாகவும் இந்த மருந்தை தருபவர்கள் மிகக் குறைவாகவும் அதே சமயம் விலை அதிகமாகவும் உள்ளது. மாநிலம் கடந்து செல்ல முடியாத சூழலும் தற்போது நிலவுவதால் மக்கள் சமூக இடைவெளி முக கவசம் வீட்டில் இருத்தல் போன்ற நடை முறைகளை பின்பற்றுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
|
பொதுமக்கள் பீதி
மேற்கண்ட இரண்டு டுவிட்டர் பதிவுகள் மூலமாக மதுரையில் கரும்பூஞ்சைத் தொற்று பரவல் இருப்பது உறுதியாகி உள்ளது.. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகமும் உரிய விளக்கத்தை தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அச்சம் வேண்டாம்
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேலு வை என்று கேட்டபோது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 45 நாட்களில் 20 நபர்களுக்கு கரும்பூஞ்சை பாதிப்பு இருந்தது. பாதிக்கப்பட்ட 20 நபர்களுக்கும் உரிய மருத்துவம் அளித்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் சிலருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கிய நிலையில் குணமடைந்துள்ளனர். கரும்பூஞ்சை பதிப்பு காரணமாக இதுவரை உயிரிழப்போ,கண் பார்வை இழப்போ ஆகிய பாதிப்புகள் இல்லை. கரும்பூஞ்சை நோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை அது ஏற்கனவே உள்ள நோய் தான் என அவர் கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications