#ResignModi ஹேஷ்டேக்கை முடக்க ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு நெருக்கடி தரவில்லை- மத்திய அரசு
டெல்லி: ஃபேஸ்புக்கில் #ResignModi ஹேஷ்டேக்கை முடக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்ததாக Wall Street Journal தவறான, மக்களை திசைதிருப்புகிற பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
Recommended Video
கொரோனா 2-வது அலையை மத்திய பாஜக அரசு சரியாக கையாளவில்லை என்பது பொதுவான விமர்சனம். இதனால் ஃபேஸ்புக்கில் #ResignModi ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது.
இதில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் திடீரென #ResignModi ஹேஷ்டேக் முடக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்தே #ResignModi ஹேஷ்டேக் மீண்டும் வந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ஃபேஸ்புக் நிர்வாகம், #ResignModi ஹேஷ்டேக் முடங்கியது தற்செயலானதுதான். இந்த முடக்கம் எதிர்பாராதது என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் நெருக்கடியால்தான் #ResignModi ஹேஷ்டேக் முடக்கப்பட்டது Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. Wall Street Journal செய்தி தவறானது; மக்களை திசைதிருப்பும் பொய்யான செய்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் India Threatens Jail for Facebook, Whatsapp and Twitter Employees என்ற தலைப்பில் முற்றிலும் ஒரு பொய்யான செய்தியையும் Wall Street Journal வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த பத்திரிகைக்கு அதிகாரப்பூர்வமான மறுப்பும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசின் நெருக்கடியால் #ResignModi ஹேஷ்டேக்கை ஃபேஸ்புக் முடக்கியது
முடிவு
Wall Street Journal செய்தி பொய்யானது.