Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீத்தாப்பழம்.. வாதநோயை விரட்டி.. சீத்தாப்பழத்துல அத்தனையும் நன்மையா? மன அழுத்தத்தை போக்கும் சீதாபழம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாதநோயை தீர்க்கக்கூடிய பழங்களில் முதன்மையானது சீத்தாப்பழம்.. தித்திப்பு நிறைந்த இந்த பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா? குடல் புண்களை போக்குவதில் எந்தவகையில், இந்த சீத்தாழப்பழம் உதவுகிறது?

கஸ்டர்ட் என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவையை கொண்டுள்ளதால், இந்த பழத்திற்கு 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று பெயர் வந்ததாம்.. வைட்டமின் B, மக்னீசியம், வைட்டமின் C, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிரம்பிகிடக்கின்றன.

Do you know the Amazing Health Uses of Custard Apple and custard apple is the Excellent Fruit for Rheumatism

இரும்புச்சத்து: 100 கிராம் சீத்தாபழத்தில் 94 கலோரிகள் இருப்பதால், உடல் எடை பலவீனமானவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.. இந்த சீதாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் உடலில் சேராது... நினைவுத்திறனையும், ஞாபக சக்தியையும் பெருக்கக்கூடிய இந்த பழத்தினை வளரும் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், இந்த சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை விலகும்.. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை தடுத்துநிறத்துவதில் சீத்தாப்பழம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த சீதாப்பழங்கள், குடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற துணைபுரிகிறது.

மனநிறைவு: மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டால் மனம் அமைதி பெறும்.. காரணம், இதிலிருக்கும் கால்சியம், மெக்னீசியம் மன அழுத்தத்தை சரி செய்கிறது.. அத்துடன் நல்ல தூக்கத்தையும் தருகிறது.. குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வை நீக்குகிறது.. சுறுசுறுப்பாகவும் இயங்க வைக்கிறது.. சரும வறட்சி இருப்பவர்களும் தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டு வரலாம்.

இதிலுள்ள தாமிரச்சத்து, உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.. காலையில் வெறும் வயிற்றில் ஒரு சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால், அமிலத்தன்மையை சீராக்கிவிடும்.. வயிற்றிலும் புண்களும் ஏற்படாது. அல்லது சிறிது வெந்தயத்தை ஊற வைத்து, அதனுடன் சீதாப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டாலும் குடல் புண்களும் ஆறிவிடும்.. அதேபோல, சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் நீங்கிவிடும்..

வாத நோய்: வாத நோய்களுக்கு இந்த பழம் ஏற்றதாக உள்ளது.. இந்த பழத்திலுள்ள மக்னீசியம், உடலிலுள்ள நீர்த்தன்மையை சமநிலைப்படுத்துவதுடன், மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் தடுத்துவிடுகிறது. அதனாலதான், ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு சீதாப்பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

இந்த பழங்கள் தசைகளின் பலவீனத்தை எதிர்த்துப் போராட கூடியது.. மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாத நோய்களை போக்கக்கூடியது இந்த பழங்கள். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் பலத்தை தரக்கூடிய பழமாக சீத்தாப்பழம் விளங்குகிறது. வெறும் வயிற்றில் இப்பழத்தை சாப்பிடாமல், காலை உணவுடன் அல்லது எல்லா வேளையும், உணவுடன் சேர்த்து எடுத்துகொள்ளலாம்.

சர்க்கரை நோயாளி: இதிலுள்ளது சர்க்கரை இயற்கையானது என்றாலும், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், குறைவாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தை குறைவாக சாப்பிடலாம் என்கிறார்கள்.. ஆனால், காயாக இருக்கும்போது சாப்பிட்டால் மட்டுமே பலன் கிடைக்கும்.

சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். சீதாப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையை பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலைமையில் இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+